குட்டிமணிக்கு மறுக்கப்பட்ட எம்.பி. பதவி பிரேமலாலுக்கு வழங்கப்பட்டது எப்படி? – சஜித் கேள்வி!

Untitled 1p 1
Untitled 1p 1

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த குட்டிமணி எம்.பியாகப் பதவியேற்க அரசமைப்பில் இடமளிக்கப்படவில்லை. ஆனால், அதேபோன்று மரணதண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகர எம்.பியாகப் பதவியேற்க எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது?

  • இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

இன்று நாடாளுமன்றத்தில் ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும், 1982 ஆம் ஆண்டில் ‘ரெலோ’ அமைப்பின் தலைவரான குட்டிமணி என்ற செல்வராஜா யோகச்சந்திரனை நாடாளுமன்ற உறுப்பினராகக் குறிப்பிட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டிருந்த போதும், அப்போதைய சபாநாயகர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

அரசமைப்பின் 89 மற்றும் 91ஆம் உறுப்புரைகளை காட்டி அவரின் எம்.பி. பதவி நிராகரிக்கப்பட்டது. அவர் தனது தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்த நிலையிலேயே அவருக்கு பதவி நிராகரிக்கப்பட்டது.

ஆனால், தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த பிரேமலால் ஜயசேகர எம்.பியாகியுள்ளார்.
அப்படியாயின் தற்போதைய சபாநாயகர் அரசமைப்பை மீறி நடந்துகொண்டுள்ளார் என்றே அர்த்தப்படும்” – என்றார்.