13 வது திருத்தச் சட்டத்தில் கை வைக்க நாம் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என பொதுஜன பெரமுன அரசின் பங்காளி கட்சிகளான சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆகியன கோட்டபாய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் முன்னர் பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது 13 வது திருத்தச் சட்டத்தில் கை வைக்க நாம் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறியிருந்தார்.
இதேவேளை இன்று(17) சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக்கு உட்பட்ட செங்கலடி பிரதேச சபையின் விசேட கலந்துரையாடலில் போது 13வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக குறித்த அரசியல் கட்சிகள் பிரேரணையினை நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.