ஜனாதிபதிக்கு பகிரங்கமாக மரண அச்சுறுத்தல்!

Gottabaya 720x450 2
Gottabaya 720x450 2

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட உயர் அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த விவகாரத்தில் பொடிலெசி என அழைக்கப்படும் ஜனித் மதுசங்கவை சந்தேக நபர்களில் ஒருவராக பெயரிடப்பட்டுள்ளதாக காலி பிரதான நீதிமன்றம் தகவல் வெளியிட்டுள்ளது.

அண்மையில் புஸ்ஸ சிறைச்சாலையில் வைத்து ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் சிறைச்சாலை திணைக்களத்தின் உயர் அதிகாரிகளுக்கு பகிரங்கமாக மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

இது குறித்த, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் சீராக்கல் மனுவொன்றின் மூலம் மேற்கொண்ட கோரிக்கையை இன்று ஆராய்ந்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதேவேளை சந்தேகநபரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கவும் நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.