தமிழ் கட்சிகள் திட்டமிட்ட உண்ணாவிரத போராட்டம் நாளை திட்டமிட்டபடி நடைபெறும். மாற்று இடமொன்றில் போராட்டத்தை நாளை காலையில் அதிரடியாக ஆரம்பிப்பதென தமிழ் கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இந்த முடிவை இன்று (25) மாலை தமிழ் கட்சிகளின் சார்பில் சட்டத்தரணி என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறை நீதிவானின் கட்டளையில் பிரதிவாதிகளாக யாரையும் குறிப்பிடவில்லையென்ற போதும், நீதிமன்ற உத்தரவிற்கு மதிப்பளித்து நீதிமன்ற கட்டளையை மீறாமல் திட்டமிட்டபடி உண்ணாவிரத போராட்டம் நடக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.