சம்பிக்க அம்பலப்படுத்திய ரகசியம்

1 waka
1 waka

நல்லாட்சி அரசாங்கத்தில் நீதி அமைச்சராக பதவி வகித்த விஜேதாச ராஜபக்ஸவே மஹிந்த அரசாங்கத்தில் ஊழல் புரிந்தவர்களை சிறைப்படுத்த விடாமல் பாதுகாத்து வைத்திருந்ததாக அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

விஜேதாச ராஜபக்ஸ நீதி அமைச்சராக இருந்தபோது ஊழல் பேர்வழிகள் பலருடைய ஆவணங்களை தம்மிடம் வைத்துக் கொண்டு வெளிவராதவாறு தடுத்துக் கொண்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் அமைச்சர் விஜேதாசவுடன் கூட்டாக ஒரு குழு அரசாங்கத்துக்குள் ராஜபக்ஸாக்களைக் காப்பாற்றுவதற்காக செயற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலைமை சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய அரசாங்கத்தில் ஏற்படாது எனவும் அவர் மேலும் கூறினார்.

வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து நடாத்தப்பட்ட பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.