இலங்கையில் அதிகூடிய கொரோனா மரணம் :இன்று மாத்திரம் ஐவர் பலி!

download 26
download 26

கொரோனா தொற்றின் காரணமாக நாட்டில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

இன்று கொரோனா தொற்றின் காரணமாக ஐந்துபேர் மரணமடைந்துள்ளதாகவும் அவர்கள் முறையே( 46, 68, 58, 73 மற்றும் 73) ஆகிய அகவைகளை கொண்டவர்கள் எனவும் அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.இதனையடுத்து இலங்கைக்குள் கொரோனா மரண எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது

இதேவேளை இன்று மரணமானவர்களில் ஒரு ஆண்மற்றும் நன்கு பெண்கள் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

அதன்படி, இலங்கையில் கொரொனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக பதிவாகியுள்ளது. விபரம் கீழ்வருமாறு,

  1. கொழும்பு 02 பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய ஆண் ஒருவர். (பிம்புற வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் நேற்றையதனம் உயிரிழந்ததை அடுத்து இடம்பெற்ற PCR சோதனையில் இவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது, மேலும் இவர் ஒரு சிறுநீரக நோயாளி என தெரிவிக்கப்படுகிறது.)

இதேவேளை நாட்டில் இதுவரையில் 12 ஆயிரத்து 187 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 6 ஆயிரத்து 623 பேர் குணமடைந்துள்ள நிலையில், 5 ஆயிரத்து 540 பர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்என்பதும் குறிப்பிடத்தக்கது .

4bb545f9 cb9a 4782 a1e5 a6efc6be0777
4bb545f9 cb9a 4782 a1e5 a6efc6be0777

.