தமது இனத்தின் விடுதலைக்காக களமாடி வீரச்சாவினைத் தழுவிக் கொண்ட மாவீரகளை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர் தாயகத்தில் உணர்வு பூர்வமாக இன்று அனுஷ்ட்டிக்கப்பட்டது
மாவீரர் நாள் நிகழ்வுகள்நடத்துவதற்கு அரசாங்கம் தடைவித்திருந்தபோதிலும் மக்கள் மற்றும் அரசியல்பிரமுகர்கள் தங்கள் இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில்சுடரேற்றி மாவீரர்களை நினைவு கூர்ந்தனர்
இதேவேளை நாட்டில் கடந்த 2009 ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட தன் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை தடைச்செய்யப்பட்ட அமைப்பாக அப்போதைய ஜனாதிபதியும் தற்போதையபிரதமருமானமஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அறிவித்திருந்தபோதும் கடந்த 2016 ஆண்டு மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதியாக இருந்தபொழுது மாவீரர் நாள் நிகழ்வுகள் அனுஷ்ட்டிக்கப்பட்டது.
இறுதியாக கடந்த வருடம் தற்போதைய ஜனாதிபதி அவர்களின் ஆட்சியின் ஆரம்பத்திலும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது