இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 122ஆக அதிகரித்துள்ளது.
மரணங்கள் பதிவான பகுதிகள்
*கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 74 வயது ஆண்
*கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த 74 வயது பெண்
*ராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 93 வயது பெண்
*கொழும்பு – 10 பகுதியைச் சேர்ந்த 81 வயது ஆண்