பண்டிகை காலங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவும் – ஹரித அலுத்கே

download 3 3
download 3 3

எதிர்வரும் பண்டிகை காலங்களில் நாட்டில் கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவ கூடும் என்று எதிர்பார்ப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கும் ஒருவர் கொரோனா தொற்றால் மரணிப்பதாக அறிக்கை தெரிவிக்கின்றது என அரசு வைத்திய அதிகாரிகள் சங்க (GMOA) செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனைத் தெரிவித்தார்.

மேலும், நேற்றைய தினம் சுகாதார அமைச்சில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பண்டிகை காலங்களில் பயணத்தைக் கட்டுப்படுத்துமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்வதாகச் சுகாதார சேவைகளின் துணை அதிகாரி வைத்தியர் ஹேமந்த ஹெரத் தெரிவித்துள்ளார்.