கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்தை தாண்டியது

202006220903239157 Integrated In Vellore and Thiruvannamalai districts Corona SECVPF 2
202006220903239157 Integrated In Vellore and Thiruvannamalai districts Corona SECVPF 2

நாட்டில் மேலும் 798 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதில் 567 பேர் திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஏனைய 230 பேர் சிறைச்சாலை கொரோனா கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் மற்றும் ஜோர்தானிலிருந்து நாடு திரும்பிய ஒருவர் ஆகியோரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 822 ஆக உயர்ந்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 29ஆயிரத்து 378 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 7ஆயிரத்து 978 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 21 ஆயிரத்து 258 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 566 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றால் இதுவரை 142 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.