கொரோனா தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்தவர்களில் மேலும் 785 பேர் குணமடைந்ததை அடுத்து, இலங்கையில் இந்த நோயில் இருந்து குணமடைந்து சிகிச்சை மையங்களில் இருந்து வெளியேறியோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போது 25 ஆயிரத்து 652 பேர் இந்த நோயில் இருந்து பூரணமாக குணமடைந்திருப்பதாக, தொற்றுநொயியல் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி தற்போது எட்டாயிரத்து 312 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.