ஜனாஸாக்களை புதைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக வெளியாகிவரும் தகவல்கள் பொய்யானது -சுகாதார அமைச்சு!

அமைச்சு 2
அமைச்சு 2

கொரோனா தொற்றினால் உயிரிழக்கின்ற நபர்களின் ‘உடல்களை புதைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக வெளியாகிவரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது’ என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இன்றையதினம் அறிக்கை ஒன்றின் மூலம் சுகாதார அமைச்சு இந்த விடயத்தை வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸினால் உயிரிழந்த உடல்களை புதைக்க உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதாக கூறப்படுகிற சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.