ராஜபக்ச அரசைக் கவிழ்க்க மைத்திரி அணி மீண்டும் சதி: இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க ஆவேசம்!

ராஜபக்ச அரசுக்கு எதிராக மீண்டும் சதித்திட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி களமிறங்கியுள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்களை விரைவில் அம்பலப்படுத்துவோம்.என்று இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

அரசுக்குள் இருந்துகொண்டே வெட்கம் இல்லாமல் அரசுக்கு எதிரான செயற்பாடுகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேற்கொண்டு வருகின்றது.

இந்தச் சூழ்ச்சியில் ஈடுபடுவோரை விரைவில் அரசு அம்பலப்படுத்தும். அப்போது அவர்களின் போலி முகத்தை மக்கள் அறிவார்கள்.

எந்தச் சதித்திட்டங்களாலும் ராஜபக்ச அரசைக் கவிழ்க்கவே முடியாது என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் கூறிவைக்க விரும்புகின்றேன்.

அரசுக்குள் இருந்துகொண்டே சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினருடன் ‘டீல்’ பேசுபவர்கள் விரைவில் முகவரியற்றுப் போவார்கள் என குறிப்பிட்டார்.