54 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை!

542203
542203

இன்றைய தினத்தில் நாட்டில் 337 கொரோனா தொற்றாளர்கள் பதிவானதை தொடர்ந்து இலங்கையில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 54 ஆயிரத்தை கடந்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 54,087 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 46,594 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், 270 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

7,223 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.