கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 276 ஆக உயர்வு!

5e8fd2f3b3b09215fa1a9cb4 1
5e8fd2f3b3b09215fa1a9cb4 1

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 276 ஆக உயர்வடைந்துள்ளது.

பேலியகொடையை சேர்ந்த 71 வயதுடைய பெண் ஒருவரும், அத்துருகிரியவை சேர்ந்த 46 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாட்டில் மேலும் 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.