21 நாட்களில் 12,615 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

covid 4
covid 4

இலங்கையில் கடந்துள்ள 21 நாட்களில் மாத்திரம் 12 ஆயிரத்து 615 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 543 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 2 ஆயிரத்து 440 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 960 பேருக்கும் வைரஸ் பரவியுள்ளது.

அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் 114 பேருக்கும், பதுளையில் 22 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, கடந்த நவம்பரில் 17 ஆயிரத்து 472 பேருக்கும், டிசம்பரில் 18 ஆயிரத்து 838 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.