இரணைதீவில் கொரோனா சரீரங்களை புதைக்க ரவூப் ஹக்கீம் எதிர்ப்பு

download 1 1
download 1 1

இரணைதீவில் கொவிட் சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானம் இன பாகுப்பாட்டை ஏற்படுத்தும் என்ற வகையில், நாடாளுமன்ற உறுப்பினரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் கருத்து வெளியிட்டுள்ளார்.

கொவிட்-19 நோயால் உயிரிழக்கின்றவர்களின் சரீரங்களை கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைதீவில் அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் இன்று அறிவித்தது.

ஆனால் இந்த விடயத்தில் ஏற்கனவே அவர்கள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியானது என நிரூபிப்பதற்கான முயற்சியாகவே இது அமைகிறது என்றும் ஹக்கீம் குற்றம் சுமத்தியுள்ளார்.