மைத்திரியை சிறைக்குள் தள்ள வேண்டும் என்றால் உண்மையான சூத்திரதாரிகள் தூக்கிலிடப்படவேண்டும் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

SLFP 720x450 1
SLFP 720x450 1

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமைக்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறையில் அடைக்கப்பட வேண்டுமானால் அந்தத் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள் தூக்கு மேடையில் பகிரங்கமாக ஏற்றப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“எந்தவொரு ஊடகவியலாளரை அல்லது எதிரியைக் கொல்லாத ஒரே இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாத்திரமே. அவர் எவரையும் காணாமல் ஆக்கவோ அல்லது எந்த அமைப்புக்கும் தீ வைக்கவோ அல்லது தன்னைக் கேலி செய்த எவருக்கும் பதிலடி கொடுக்கவோ இல்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைக் குண்டர்கள், போதைப்பொருள் விற்பனையாளர்கள், பாலியல் வல்லுறவாளர்கள், மோசடிக்காரர்கள் மற்றும் பயங்கரவாதிகளிடமிருந்து விடுவித்தவர் மைத்திரிபால சிறிசேனவே.

அதேபோல், பேராசிரியர் விஸ்வ வர்ணபால, பேராசிரியர் ரோஹண லக்ஸ்மன் பியதாச மற்றும் கலாநிதி சுரேன் ராகவன் போன்றவர்களைத் தலைமைப் பதவிகளுக்கு நியமித்தவரும் அவரே தெரிவித்துள்ளார்.