ஐ.எஸ்.அமைப்பின் திட்டத்தை கொண்டு சஹ்ரான் ஹசீமுடன் இணைந்து ஏப்ரல் 21 தாக்குதல் நடத்துவதற்கு துணையாக இருந்தவர்கள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மொஹமட் இப்ராஹிம், மொஹமட் நௌபர் ஆகிய நபர்கள் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று பேசிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை தொடர்பான விவாதங்கள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.