மீண்டும் சு.க. ஆட்சி; அதுவே எனது இலக்கு! – கண்டியில் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த பின் மைத்திரி சபதம்

9 2
9 2

மீண்டும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியை அமைப்பதே எனது எதிர்ப்பார்ப்பு. அதற்கேற்ற வகையில் கட்சி கட்டியெழுப்பப்படும்.”என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

8 1

கண்டியில் நேற்று செவ்வாய்க்கிழமை, மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த பின்னர் அங்கு நடைபெற்ற ஊடகவியலார் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

7 2

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

”ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சவால்களுக்கு மத்தியில் பயணித்த கட்சியாகும். மீண்டெழுவதற்கான சக்தி இந்தக்  கட்சிக்கு இருக்கின்றது. 14 பேர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றனர். இதற்கு முன்னர் 8 எம்.பிக்கள் அங்கம் வகித்த சந்தர்ப்பமும் உள்ளது. எனவே, எதிர்காலத்தில் சுதந்திரக் கட்சி ஆட்சியை அமைப்பதே எமது எதிர்ப்பார்ப்பு.

6 1

அரசுக்கு ஆதரவு வழங்கும் அதேவேளை கட்சியைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்படும்” – என்றார்.

5 2