யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் கைது விடயத்தில் அரசாங்கத்தின் செயற்பாடு கண்டிக்கத்தக்கது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கொழும்பு உள்ளிட்ட நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மாநகர சபைகளில் பல்வேறு பிரிவுகள் உருவாக்கப்பட்டு, வாகன நிறுத்தல், கட்டணங்களை அறவிடுதல் போன்ற பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இளம் மற்றும் கடும் நீல நிறங்களைப் பயன்படுத்தி, ஒரு பிரிவை உருவாக்குவதை, விடுதலைப் புலிகளை ஊக்குவிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தாம் யாழ்ப்பாண மாநகர முதல்வரின் ஆதரவாளர் இல்லை என்றாலும், அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டைக் கண்டிக்கிறேன் என்றார்.
இந்த விடயங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.