இன்பமும் மகிழ்ச்சியும் பெருகட்டும் – சாள்ஸ் நிர்மலநாதன்

Charles Nirmalanathan 700x380 1
Charles Nirmalanathan 700x380 1

பிறக்கும் தமிழ் சித்திரை புதுவருடத்தில் எமது தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் ஆண்டாகவும் இன்பமும் மகிழ்ச்சியும் பெருகும் புதிய ஆண்டாகவும் மலரவேண்டும் என என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

உலகத்தை பெரும் அச்சத்தில் ஆழ்த்திக்கொண்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று நோய் மக்களை விட்டு முற்றாக அழிந்து போகவேண்டும். தமிழ் மக்கள் என்றும் இல்லாதவாறு தற்போது கடுமையான இராணுவ நெருக்கடிக்குள் வாழ்ந்துவரும் தற்போதைய சூழ்நிலையில் எமது மக்களின் நீண்ட கால நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

அதற்காக தொடர்ந்தும் எனது குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கும். சூழ்ச்சிகள் தோற்று நியாயமான எமது போராட்டம் வெற்றி பெற வேண்டும். அனைவரின் வாழ்வில் மகிழ்ச்சி நிறையட்டும்! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்