நாட்டு மக்களுக்கு சுபீட்சம் கிடைக்க வேண்டும் – சஜித்

பிரேமதாச

சிங்கள – தமிழ் புத்தாண்டு என்பது கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நீண்ட வரலாற்றின் பாரம்பரியமான வாழ்வியல் என்று வர்ணிக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையில் ஒன்றுக்கொன்று சார்ந்திருத்தல் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வுடன் கூடிய போராட்டம் நிறைந்து அமையும் இந்தப்புத்தாண்டு.

அந்த போராட்டத்தில் மனிதகுலம் ஒரு தற்காலிக வெற்றியைப் பெற்றிருந்தாலும், இயற்கையை அணுகுவதும் இயற்கையிலிருந்து விலகிச் செல்வதும் மனித இருப்புக்கான சிறந்த நலன்களில் இல்லை என்பது இப்போது முன்னெப்போதையும் விட நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே, இயற்கையுடன் இணக்கமாக வாழ்வதற்கான மதிப்பை எடுத்துக்காட்டுகின்ற சிங்கள – தமிழ் புத்தாண்டு போன்ற பண்பாட்டு விழாக்கள் அடிப்படையில் சமூகத்திற்கும் உலகிற்கும் ஒரு ஆசீர்வாதமாகும்.

அதேபோன்று ‘பிலவ’ தமிழ்ப் புத்தாண்டும் எதிர்பார்ப்புடன் கூடிய ஆண்டாக அமைந்துள்ளது. நாட்டு மக்கள் புத்தாண்டு தினத்தில் புனிதமான பாற்சோறை தயாரிப்பதற்குக் கூட எதிர்பார்ப்பு மிக்கவர்களாக மாற்றப்பட்டுள்ளார்கள்.

கடந்த 2020 தொடக்கம் உலக மக்கள் அனைவரும் பாதுகாப்பிற்காக முகக்கவசம் அணிந்திருக்கிறார்கள். அதற்கு காரணமான கொவிட் 19 வைரஸை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை. இயற்கை அன்னையானவள் உலக மக்களை கஷ்டமான காலங்களில் சிந்தித்து செயற்படுத்துவதில் ஒரு புதிய பாடத்தை கற்பித்துள்ளாள்.

இவ்வாறான சூழ்நிலையில் இலங்கையர்களாக நாம் கொண்டாடும் சிங்கள – தமிழ் புத்தாண்டு நாட்டு மக்களுக்கு இன்னல்களை நீக்கி, உடல் ஆரோக்கியத்தை கொடுத்து, சுபீட்சம் கிடைக்க வேண்டும் என பிரார்த்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.