தாய்ப்பால் புரைக்கேறியதால் நான்கு மாதக் குழந்தை பரிதாப மரணம்!

22e19a52 2540 474a a562 6fd0088a5a3a
22e19a52 2540 474a a562 6fd0088a5a3a

கிளிநொச்சி மாவட்டம் முழங்காவில் பிரதேசத்திற்கு உட்பட்ட குமுழமுனைப் பகுதியில் நான்கு மாத ஆண் குழந்தை ஒன்று பால் புரைக்கேறி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பால் புரைக்கேறியதால் குழந்தை சிரமப்பட்டதை அடுத்து முழங்காவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

மேலதிக விசாரணைகளை முழங்காவில் காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.