மீண்டுமொரு தாக்குதலை நடத்துவது இலகுவான காரியமல்ல – கமல் குணரத்ன

Defence Ministry Secretary Rtd Major Kamal Gunaratne
Defence Ministry Secretary Rtd Major Kamal Gunaratne

நாட்டில் மீண்டுமொரு தாக்குதலை நடத்துவதற்கு அடிப்படைவாதிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டின் பாதுகாப்பு சிறந்த முறையில் பலப்படுத்தப்பட்டுள்ளமையினால் மீண்டுமொரு தாக்குதலை அடிப்படைவாதிகள் நடத்துவார்களாயின் அது இலகுவான காரியமல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக கமல் குணரத்ன மேலும் கூறியுள்ளதாவது, “புலனாய்வு பிரிவு, தங்களது செயற்பாடுகளை சிறந்த முறையில் தற்போது முன்னெடுத்து வருகின்றது.

இந்நிலையில் அடிப்படைவாதிகள் மீண்டுமொரு தாக்குதலை நாட்டில் நடத்துவது இலகுவான விடயமல்ல. மேலும் திறமையான சில வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.