கொரோனா நிதி வேறு எந்த திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படாது – நாமல்

ராஜபக் ஷ
ராஜபக் ஷ

கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு எந்தத் திட்டங்களுக்கும் அரசு பயன்படுத்தாது என்று விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

கொரோனாத் தடுப்புப் பணிகளுக்குத் தேவையான அனைத்து நிதிகளையும் நிதி அமைச்சர் ஒதுக்கியுள்ளார் எனவும் அவர் நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போது கூறினார்.

நாடளாவிய ரீதியில் அமைக்கப்படவுள்ள கொள்கலன் உடற்பயிற்சி மையங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 600 மில்லியன் ரூபா நிதியைக் கொரோனாத் தடுப்புக்குப் பயன்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்வைத்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும்போதே நாமல் ராஜபக்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், வரவு – செலவுத் திட்டத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட நிதியே இந்தத் திட்டத்துக்குப் பயன்படுத்தப்படும் எனவும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.