புத்தாண்டு கொத்தணியில் இதுவரை 205,333 தொற்றாளர்கள் அடையாளம்

202006220903239157 Integrated In Vellore and Thiruvannamalai districts Corona SECVPF 3
202006220903239157 Integrated In Vellore and Thiruvannamalai districts Corona SECVPF 3

இலங்கையில் இதுவரை 205,333 பேர் கொவிட் 19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் 2,976 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவர்கள் அனைவருமே புத்தாண்டு கொத்தணியைச் சேர்ந்தவர்கள் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

திவுலுப்பிட்டிய, பேலியகொடை, சிறைச்சாலை மற்றும் புத்தாண்டு கொத்தணிகளில் இதுவரையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 198,654ஆக அதிகரித்துள்ளது.

புத்தாண்டு கொத்தணியில் மாத்திரம் 113,479 பேர் கொவிட் தொற்றுறுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைக் கொத்தணியில் 6,355 பேரும், பேலியகொடை கொத்தணியில் 82,785 பேரும் திவுலுபிட்டிய கொத்தணியில் 3059 பேரும் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 4,447 இலங்கையர்களுக்கும், 318 வெளிநாட்டவர்களுக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.