நாட்டு மக்களுக்காகவே நாடாளுமன்றம் வருகிறேன் – ரணில்

1 46
1 46

யார் எதை கூறினாலும் மக்களே இறுதியில் அனைத்தையும் தீர்மானிக்கின்றனர். நாட்டினதும் மக்களினதும் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டே நாடாளுமன்றத்திற்கு செல்ல தீர்மானித்ததாக தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் ஆசனத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி பிரமானம் செய்துக்கொள்ளவுள்ளார்.

நாடாளுமன்ற மீள் வருகை குறித்து, ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து கட்சி உறுப்பினர்களுடன் இன்று வியாழக்கிழமை கலந்துரையாடி ரணில் விக்கிரமசிங்க கூறுகையில்,

நாட்டின் தற்போதைய நிலைமை மிகவும் மோசமாகவுள்ளது. தனிநபர் பொருளாதாரத்தை வலுப்படுத்தாது தேசிய பொருளாதாரம் வலுவாகாது. எனவே தீர்க்கப்படா பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். கொவிட் நெருக்கடி , பொருளாதார பாதிப்பு, இயற்றை அழிவு மற்றும் கப்பல் விபத்து என இலங்கையை சூழ பிரச்சினைகளே உள்ளன.

ஆகவே யாருடைய குறைகளை நாம் கூற வேண்டியதில்லை. எனது நாடாளுமன்ற வருகை அவர்களுக்கு தலைப்பு செய்திகளாக இருந்தாலும் நாட்டையும் மக்களையுமே நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அரசாங்கத்தினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து உறுதியாகவே நாம் செயற்பட வேண்டும். எதிர்க்கட்சி எதை கூறினாலும் இறுதியில் மக்கள் தீர்மானிப்பார்கள். நாட்டினதும் மக்களினதும் பிரச்சினைகள் குறித்து பேசுவற்கே நான் நாடாளுமன்றம் செல்கின்றேன்.

பேர்ள் கப்பல் அழிவு குறித்து அரசாங்கம் இன்னும் பொறுப்பற்ற வகையிலேயே செயற்படுகின்றது. கப்பலில் நைட்ரிஜன் கசிவு ஏற்பட்டிருப்பதை அவதானிக்கப்பட்டால் துறைசார்ந்தவர்களும் சுங்க பிரிவினர் மற்றும் வைத்தியர்களே முதலில் கப்பலுக்கு சென்றிருக்க வேண்டும். கடும் கடல் காற்றினால் கப்பலில் தீ நிறுவனம் கூறுகின்றது. ஆனால் கடும் காற்றுடன் கூடிய காலநிலை ஏற்படும் என 24 மணித்தியாலயத்திற்கு முன்னதாகவே வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்திருந்தது.

மறுப்புறம் சர்வதேசத்தின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ளவும் இல்லை. நாடாளுமன்றத்தை கூட்டி இது குறித்து கலந்துரையாடவும் இல்லை. எனவே கொவிட் வைரஸ் தொற்று எந்தளவு நீண்ட காலத்திற்கு இலங்கையை பாதிக்குமோ அதேயளவான காலம் வரை பேர்ள் கப்பல் ஏற்படுத்திய அழிவுகளும் நாட்டை தொடரும் என தெரிவித்தார்.