கொரோனா பரவலை கட்டுப்படுத்த கொள்கை ரீதியான தீர்மானம்!- பவித்ரா வன்னியாரச்சி

5e2ac097e7e25 5e2ac03a5b734 pavithra wanniarachchi

கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக விரைவில் கொள்கை ரீதியான தீர்மானங்களை மேற்கொள்ளவிருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி நேற்று தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் தொலைக்காணொளி ஊடாக நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தொற்றா நோயை கட்டுப்படுத்துவதற்கு கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய விடயம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.