சலுகை முறையில் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை இலங்கைக்கு வழங்குவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில், ஆராயப்பட்டு வருவதாக இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜப்பான் உள்ளிட்ட 6 நாடுகளின் தூதுவர்களும் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டுள்ளனர்.
இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி வழங்குவதற்கும், முதலீடு செய்வதற்கும் தமது ஒத்துழைப்புகளை வழங்குவதாக ஜப்பானிய தூதுவர் இதன்போது தெரிவித்துள்ளார்.