ஆசிரியர்கள் பாடசாலைக்கு போக வேண்டாம்! – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்

1617249660330
1617249660330

கல்வி அமைச்சிடம் இருந்து தெளிவான அறிவித்தல்கள் வரும் வரை பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடம் கேட்டுக்கொள்கின்றோம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“பொது நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கையைச் சுட்டக்காட்டிய மத்திய கல்வி அமைச்சின் செயலாளருடைய தெளிவில்லாத சுற்றறிக்கையாலும், முன்னுக்குப்பின் முரணான வெளியீடுகளாலும் அதிபர்களும், ஆசிரியர்களும் ஏன் கல்வி உயர் அதிகாரிகளும் குழம்பிப்போய் உள்ளனர்.

வேறுவிதமான நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக இவ்வாறான குழப்பமான சுற்றறிக்கைகளை வெளியிடவேண்டாம் எனக் கேட்டுக்கொள்வதோடு, அதிபர், ஆசிரியர்களை அவசியமில்லாமல் பாடசாலைக்கு அழைக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

இதைவிட பாடசாலைகளில் பிள்ளைகள் இல்லாத நிலையில் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை அழைப்பது பொருத்தமற்றது.

ஆகையால் கல்வி அமைச்சிடம் இருந்து தெளிவான அறிவித்தல்கள் (மாணவர் வருகையின் பின்னர்) வரும் வரை பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டாம்” – என்றுள்ளது.