மரண தண்டனை கைதியான பிரேமலால் ஜயசேகர, நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியபிரமாணம் மேற்கொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமாதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியபோது, ப்ரேமலால் ஜயசேகர, நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியபிரமாணம் மேற்கொண்டார்.
இதன்போது, சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர், கறுப்பு சால்வை அணிந்தவாறு தங்களது எதிர்ப்பை வெளியிட்டனர்.
அத்துடன், ப்ரேமலால் ஜயசேகர சத்தியபிரமாணம் மேற்கொண்ட சந்தர்ப்பத்தில், கூச்சலிட்டும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், குறித்த சந்தர்ப்பத்தில், சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.