தமிழர்களின் தாயக பகுதிகள் சிங்கள மயப்படுத்தலுக்கு உட்படுவதை தடுக்க முடியாது-சபா. குகதாஸ்

.குகதாஸ்
.குகதாஸ்

தமிழர்களின் தாயக பகுதிகள் சிங்கள மயப்படுத்தலுக்கு உட்படுவதை தடுக்க முடியாது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா. குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினைக்கு தமிழர் நலன் சார்ந்த தேசிய கட்சிகள், அமைப்புக்கள் இன்று வரை ஒன்றிணைந்த ஓரணியில் நிற்க தவறியுள்ளனர்.

எதிர்வரும் காலத்தில் தமிழர் தரப்பு தேசிய சக்திகள் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் தீர்வுக்கான பொறிமுறைகளை தயாரித்து அதற்கான குழுக்கள் மூலம் உள்நாட்டு வெளிநாட்டு இராஜதந்திர வியூகங்களுக்கு ஏற்ப காய் நகர்த்த தவறினால், தமிழர்களின் தாயக இருப்புக்கள் சிங்கள மயப்படுத்தலுக்கு உட்படுவது உறுதி என மேலும் தெரிவித்துள்ளார்.