தங்களுக்கு சுதந்திரம் அளிக்காவிட்டால் சிறையிலிருந்து தப்பிச் செல்லவுள்ளதாகவும் , தங்களது குழுவினர் எந்த வேளையிலும் தற்கொலைத் தாக்குதலுக்குத் தயாராகவே இருப்பதாகவும் பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல பாதாள உலகத் தலைவர்கள் இருவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொடி லெஸி மற்றும் கொஸ்கொட தாரக்க ஆகிய இரண்டு பாதாள உலகத் தலைவர்களே இவ்வாறு அச்சுறுத்தல் வெளியிட்டிருப்பதாக காலி மாஜிஸ்திரேட் நீதிமன்றில் இன்று நடந்த வழக்கு விசாரணையில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப்ப பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர், சிறைச்சாலை ஆணையாளர் உள்ளிட்டவர்களின் உயிர்கள் தங்கள் கைகளிலேயே இருப்பதாகவும், எந்த நேரத்திலும் தங்களால் அவர்களைக் கொலை செய்ய முடியும் என்றும் குறித்த இருவரும் தெரிவித்திருக்கின்றனர்.
தாங்கள் சிறையில் இருந்தாலும் இரண்டே மணித்தியாலங்களில் வெளியே உள்ளவர்களை சுட்டுப் படுகொலை செய்ய முடியும் என்றும் அவர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.