வடமாகாண சனத்தொகை பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது – சுரேஸ் பிரேமச்சந்திரன்

141206164716 suresh premachandran eprlf tna lanka tamil sri lanka 640x360 bbc nocredit
141206164716 suresh premachandran eprlf tna lanka tamil sri lanka 640x360 bbc nocredit

வடமாகாண சனத்தொகை பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இணைப் பேச்சாளரும்,ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் யுத்தம், இடப்பெயர்வு, புலப்பெயர்வு போன்ற காரணிகளாலும் முப்படைகளின் ஆக்கிரமிப்புக்கள் காரணமாகவும் மீள் குடியேற்றம் இன்னும் முழுமையடையவில்லை.

இந்த குடிசன தொகையின் வீழ்ச்சி காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்துக்கு கிடைக்க வேண்டிய பத்து நாடாளுமன்ற ஆசனங்கள் ஏழாக சுருங்கியிருக்கின்றது.

மேலும் நடந்து முடிந்த யுத்தத்தில் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. இதன் காரணமாக வடக்கு மாகாணத்தில் எமது சனத்தொகை பாரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது என குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.