திலீபனை நினைவு கூர்வதற்கு மீண்டும் தடைவிதித்தது யாழ் நீதிமன்றம்!

jaffna court
jaffna court

தியாகி திலீபனின் நினைவேந்தலிற்கு அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன் முறையீட்டு மனுவை யாழ் நீதவான் ஏ.எஸ்.பீற்றர் போல் இன்று(செவ்வாய்கிழமை) நிராகரித்துள்ளார்.

கடந்த 14ம் திகதி தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நடத்துவதற்கு யாழ்.நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இன்று திருத்த மனுவை பரிசோதனை செய்த யாழ் நீதவான் ஏ.எஸ்.பீற்றர் போல், திலீபனை நினைவுகூர்வது தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பொன்றின் உறுப்பினரை நினைவுகூர்வதாக அமைவதோடு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படக்கூடிய குற்றம் என தெரிவித்துள்ளார்.

குறித்த மன்றலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், வ.பார்த்தீபன் உள்ளிட்டவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு சார்பில் சட்டத்தரணிகள் வி.திருக்குமரன், கு.குருபரன் ஆகியோர் முன்னிலையாகிமை குறிப்பிடத்தக்கது.

.