முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் அவர் சார்ந்த குழுவினர் 18.09.2020தொடக்கம் 26.09.2020வரையான காலப்பகுதியில் தியாக தீபம் திலீபனுடைய நினைவேந்தலையோ, உண்ணாவிரத நிகழ்வுகளையோ முன்னெடுக்கமுடியாது என முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம்தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
முல்லைத்தீவு தலைமை பொலிஸ் பரிசோதகர் இந்த விடயம் தொடர்பில், முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்ததற்கமைய, நீதிமன்றம் குறித்த தடைக்கட்டளை உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.
இந் நிலையில் முல்லைத்தீவு தலைமைப் பொலிஸ் பரிசோதகர் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களின் இல்லத்திற்குச் சென்று நீதிமன்றத்தின் குறித்த தடைக்கட்டளை உத்தரவினை அவரிடம் கையளித்துள்ளார்.
ஆண்டுதோறும் அன்னைபூபதி நினைவு நிகழ்வு,திலீபன் நினைவு நிகழ்வு,மாவீரர் நாள் நினைவுகள்,முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு என்பன முன்னால் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் அலுவலகத்திலும் ஏனைய இடங்களிலம் நினைவிற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.