கடிதத்தில் கையொப்பமிடுகிறது முன்னணி!

தேசிய மக்கள் முன்னணி சீனா இரகசிய பேச்சு
தேசிய மக்கள் முன்னணி சீனா இரகசிய பேச்சு

தமிழ் மக்களின் உரிமையை வலியுறுத்தி ஜனாதிபதி, பிரதமருக்கு அனுப்பும் கடிதத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் கையெழுத்து இடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

இன்று காலை வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் இல்லத்தில் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் இணைந்து கையெழுத்திட்டு வருகிறார்கள்.

இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் சட்டத்தரணிகள் க.சுகாஷ், ந.காண்டீபன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

ஏனைய கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

தற்போதுகடித வரைபு தயாரிக்கப்பட்டுவருகின்றது இதேவேளை இது தொடர்பிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அழைப்பின் பேரில் நேற்றைய தினம் தமிழ்த்தேசிய
கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்த போதிலும் குறித்த கலந்துரையாடலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது