ராஜபக்ச அரசை வன்மையாக கண்டிக்கிறோம்-சம்பந்தன்

20 1440051938 sambandan s1 600
20 1440051938 sambandan s1 600

திலீபனின் நினைவேந்தலை தடை செய்த ராஜபக்ச அரசை வன்மையாக கண்டிக்கிறோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தமிழ் மக்கள் தங்கள் இன விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூர உரிமையுண்டு. அதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் எடுத்துள்ள நடவடிக்கையை நான் வரவேற்பதோடு அந்தக் கட்சிகளின் கடிதத்தில் உள்ள கோரிக்கைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். கடந்த ஆட்சியைப் போல் இந்த ஆட்சியிலும் நினைவேந்தல்களைத் தமிழர்கள் சுதந்திரமாகக் கடைப்பிடிக்க வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.