ஐ.தே.க பிரபாகரனுக்கு நாட்டை எழுதி கொடுத்தது – மஹிந்தானந்த சாடல்

625.500.560.350.160.300.053.800.900.160.90 1 8
625.500.560.350.160.300.053.800.900.160.90 1 8

வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஐக்கிய தேசியக் கட்சி 2001 ஆம் ஆண்டு நாட்டை எழுதிக்கொடுத்தது என மஹிந்தானந்த அழுத்தகமே குற்றம் சுமத்தியுள்ளார்.

20 ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியதுடன் பதாகைகளையும் சபையில் ஏந்தியவாறு இன்று(22) எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த விடயம் குறித்து நாடாளுமன்றில் உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்,

கோட்டா- மஹிந்த ஆட்சி காலத்தில் இந்த நாட்டுக்கு எந்வொரு அநீதியும் நடக்காது. நீங்கள் தான் 2001 ஆம் ஆண்டு வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு நாட்டை எழுதிக் கொடுத்தீர்கள்.

2015 இல் வெற்றி பெற்று, எமது இராணுவத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவும் முற்பட்டீர்கள். அரச சொத்துக்களை விற்றீர்கள். இதனைத் தான் நீங்கள் கடந்த காலத்தில் செய்தீர்கள் என மேலும் தெரிவித்துள்ளார்.