உண்ணாவிரதம் கிழக்கிலும் நடத்த வேண்டும் – தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை

55 720x380 1
55 720x380 1

யாழ் செல்லச் சந்நிதி ஆலயத்தில் திலீபனின் உண்ணாவிரம் செய்ய எடுக்கப்பட் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்து செல்லச் சந்நிதி ஆலயத்தில் எவ்வாறு உண்ணாவிரதம் நடைபெறுகின்றதே அதேபோல கிழக்கில் மட்டக்கிளப்பிலும் அவ்வாறு அதேநேரத்தில் நடாத்த ஏற்பாட்டுக்குழு ஏற்பாடு செய்வேண்டும் என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்

மட்டக்களப்பு ஊடக கற்கை நிலையத்தில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் இவ்வாறு அவர் கேரிக்கை விடுத்துள்ளார்

தியாகதீபம் திலீபன் இந்த நினைவேந்தல் தடையை உடைப்பதற்காக வடக்கு கிழக்கில் உள்ள 10 மேற்பட்ட தமிழ் தேசிய கட்சிகள் இன்று ஒன்றினைந்து பாராட்டத்தக்க விடயம். இந்த ஒற்றுமை என்பது எமது இன நலனுக்காக நீடிக்க வேண்டும் என்பதே எமது அனைவரது விருப்பம்

அவ்வாறே நீதிமன்றம் இன்று மீண்டும் தடை உத்தரவை பிறப்பித்ததையடுத்து தமிழ் கட்சிகள் கூடி 26ம் திகதி செல்வசந்நிதி ஆலயமுன்றலில் அடையாள உண்ணாவிரதமும் 28 ம் திகதி வடகிழக்கு ரீதியில் கர்தால் செய்வதாகவும் தீர்மானம் எடுத்து அதனை அறிவித்தது வரவேற்கத்தக்க விடயம்.

இருந்தபோதும் இந்த வடக்கைச் சேர்ந்த எமது தலைவர்கள் இந்த முடிவை எடுக்கும் முன்னர் கிழக்கு மாகாணத்தையும் அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். இன்று அம்பாறையில் இருக்கின்ற ஒருவரே மட்டக்களப்பில் இருக்கின்ற ஒருவரே செல்வச் சந்நிதிக்கு சென்று அந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வது என்பது இந்த அச்சுறுத்தலான நிலையில் ஒரு சாதாரண விடயமல்ல

வடகிழக்கு இணைந்த தாயகம் என வாயால் மாத்திரம் தேசியம் கதைக்கின்றோம். ஆனால் ஒரு விடயம்வரும் போது நாங்கள் யாழ்ப்பாணத்துக்குள் முடங்கி கொள்கின்றோம். அப்போது ஏன் கிழக்கைப்பற்றி சிந்திப்பதில்லை கிழக்கில் மாவீரர்கள் இல்லையா? மாவீரர் குடும்பங்கள் இல்லையா? போராளிகள் இல்லையா? எம் மக்களுக்கு உணர்வில்லையா?

இந்த விடுதலைப் போராட்டத்தில் பெரும் பங்கெடுத்ததுடன் அதிகளவான போராளிகளையும் அதிகளவான பாதிப்பை கொண்டதாக இந்த கிழக்கு மாகாணம் இருக்கின்றது. இருந்தபோதும் தியாகதீபம் தீலீபனின் நினைவை அனுஷடிப்பதற்கு இந்த மக்களுக்கு உரிமை இல்லையா? அவருக்காக கண்ணீர்விடுவதற்கு எம்மக்களுக்கு உரிமை இல்லையா?

நீங்கள் செய்யும் இப்படியபான சிறுசிறு தவறுகளினால் தான் எம்மக்கள்கள் இளைஞர்கள் இன்று மனங்களில் இருக்கின்ற வெறுப்புக்களால் அரசதரப்புக்களான பிள்ளையான், கருணா, வியாழேந்திரன், போன்றேர்களிடம் தேர்தல் காலங்களிலும் சரி ஏனைய காலங்களிலும் சரி அங்கு செல்லுகின்றனர் ஆகவே இந்த நிலை மாற்றப்படவேண்டும்.

பெருமளவிலன கிழக்கைச் சேர்ந்த போராளிகள் வடக்கில்தான் இறந்திருக்கின்றனர் அவர்கள் திலீபனை நேசிக்கின்றனர் அவருடைய உண்ணாவிரதத்தை மதிக்கின்றனர். இவ்வாறான நிலையில் கிழக்கு இளைஞர்கள் கிழக்கு மக்கள். கிழக்கிற்காக உயிரை கொடுத்த மாவீரர்களின் பெற்றோர்கள் சகோதர சகோதரிகளின் மனக்குமுறல்களை நான் இன்று அறிவேன்

தமிழர் தாயகத்தில் தமிழர் தேசியம் சம்மந்தப்பட்ட எந்த விடயமாக இருந்தாலும் வடகிழக்கு பிரதிநிதித்துவப்பட்டுத்தான் செய்யவேண்டும். இந்த தலைவர்கள் எடுத்த தீர்மானங்களை மதிக்கின்றேன.; இந்த தலைவர்கள் இன்னும் இரண்டு நாட்கள் இருக்கின்றது எனவே இந்த தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்து யாழ் செல்வச் சந்நிதியில் நடக்கின்ற அதேநேரம் கிழக்கில் மட்டக்களப்பில் மாமாங்க ஆலயமே அல்லது கொக்கட்டிச்சோலை ஆலயத்திலே அதேநேரத்தில் இங்கும் ஒரு உண்ணாவிரத்தை செய்தால் தான் வடகிழக்கில் அதனுடைய எழுச்சி சர்வதேச ரீதியல் பயனளிக்கும்

தனியாகவே யாழ்ப்பாணத்தில் மட்டும் தமிழ் தேசியத்தையே. தமிழ்தேசயத்தின் நிகழ்சிகளையே எந்தகாலத்திலும் முடக்கமுடியாது. இவ்வளவு காலமும் இதுதான் நடந்தது எம் தலைமைகள் இதைத்தான் செய்து வந்தார்கள் இப்போதும் செய்து வருகின்றார்கள்.

இன்று இளம் சந்தியினரான நாங்கள் இதனை மாற்றுவதற்காகத் தான் யோசிக்கின்றோம் இதற்காகத்தான் நடைபயணத்தை இளைஞர்கள் ஏற்பாடு செய்தனர் அதற்கு தடை ஏற்பட்டது இந்ததடைகள் தகர்த்து எறியப்பட வேண்டும் என்பதற்கே நாங்கள் இளைஞர்கள் இருக்கின்றோம். வடகிழக்கில் நாங்கள் ஓற்றுமையாக தேசியத்தை முன்னிறுத்திக் கொள்ளவேண்டும் என இருக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .