22 ற்கு அதிகமாக ஆசனங்கள் கிடைத்திருந்தால் அரசாங்கம் எமது காலடியில் – இரா.சாணக்கியன்

R.Sanakkiyan 2

எமக்கு 22 ற்குஅதிகமான ஆசனங்கள் கிடைத்திருந்தால் அரசாங்கம் எமது காலடிக்கு வந்திருக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டகளப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 16 ஆசனங்கள் கிடைக்கப் பெற்றிருந்தன. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய பட்டியல் உட்பட 10 ஆசனங்களை பெற்று கூட்டமைப்பு பின்னடவை சந்தித்து.

எவ்வாறாயினும், நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் அதிகமான ஆசனகள் கிடைக்கப்பெற்றிருந்தால் எங்களுடைய அரசியல் தீர்வுகளை நாங்கள் அடைந்திருக்கலாம். ஆனால் இப்போது அங்கொரு ஆசனம், இங்கொரு ஆசனம் என பிரிந்து இருப்பதால் தமிழர்களின் சிறுபான்மை இனம் பலமிழந்து போய்விட்டது என மேலும் தெரிவித்துள்ளார்.