டக்ளசின் தம்பியை திலீபன் கொண்டார் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி தலைவர் க.இன்பராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றையதினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
டக்ளஸ் தேவானந்தாவிடம் நான் ஒரு கேள்வியை முன் வைக்கிறேன்,திலீபன் அவர்கள் தான் உங்கள் தம்பியை கொலை செய்தார் என்று கூறியிருந்தீர்கள். அதற்க்கு உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கின்றது. கடந்த காலத்தை எடுத்துக் கொண்டோமானால் சிங்கள, முஸ்லீம் மற்றும் தமிழ் ஆயுதக்குழுக்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களால் ஏற்பட்ட பாதிப்புகளை விட உங்களால், உங்கள் கட்சியால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தான் அதிகம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
டக்கலஸ் தேவானந்தா ஒரு அமைச்சராக இருந்து கொண்டே பல குற்றங்களை செய்திருக்கிறார். இப்படியானவர் திலீபன் பற்றி கதைப்பதற்கு வெட்கம் இல்லையா? டக்கலஸ் தேவானந்தாவை ஒரு முறை தமிழ் மக்கள் வீட்டிற்கு அனுப்பியிருந்தாள் இன்று திலீபன் பற்றி அவர் கதைத்திருக்க மாட்டார் என மேலும் தெரிவித்துள்ளார்.