வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு உள்ள தனித்துவத்தை அடிப்படையில் தான் அவர்கள் அரசுடன் இணைந்து செயற்படுவதற்கு சிந்திக்கின்றனர் என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான க.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார் .
நேற்றைய தினம் (10) கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த விஷேட புலனாய்வுக் குழுவினால் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரனிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
குறித்த விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் தனது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதே வேளை குறித்த ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்களினால் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன அவற்றிக்கு
பதிலளிக்கும் முகமாக க.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்த விடயங்கள் அடங்கிய காணொலியின் முழுவடிவம்: