20ஆவது திருத்தச் சட்டத்துக்கு 19 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – 9 பேர் மாத்திரம் ஆதரவு!

sri lankan parliament 1
sri lankan parliament 1

நாட்டின் 9ஆவது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 28 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 19 பேர் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், 9 பேர் ஆதரவாகவும் வாக்களித்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (10), தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (02), தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி (01), தமிழ் முற்போக்குக் கூட்டணி (அரவிந்குமார் தவிர 5 பேர்) ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும்,ஐக்கிய மக்கள் சக்தியின் தமிழ்நாடாளுமன்ற உறுப்பினரான வடிவேல் சுரேஷும் எதிராக வாக்களித்தனர்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்,ஈழமக்கள் ஜனநாயக கட்சி , தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 5 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ் உறுப்பினரான அங்கஜன் இராமநாதன், பொதுஜன பெரமுன கட்சியில் உள்ள எஸ்.வியாழேந்திரன்,தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் . சுரேன் ராகவன் ஆகியோரும் 20 இற்குச் சார்பாக வாக்களித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்அரவிந்த குமாரும் இந்தப் பட்டியலில் இணைந்தார்.

9 ஆவது நாடாளுமன்றத்துக்கு மக்களின் அங்கீகாரத்துடன் 25 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகினர். தேசியப் பட்டியல் ஊடாக மூவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.