இலங்கையில் 16 ஆவது கொரோனா தொற்று நோயாளியின் மரணம் பதிவு!

113271 30 coronavirus 660
113271 30 coronavirus 660

இலங்கையில் 16 ஆவது கொரோனா தொற்று நோயாளியின் மரணம் இன்று (24.10.2020) பதிவாகியுள்ளது.

கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயதான ஆண் நபரே இன்று கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார் என்று  அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனாத் தொற்று காரணமாக இந்த வாரத்தில் இலங்கையில் பதிவான 3ஆவது மரணம் இதுவாகும்.