யாழ்ப்பாணத்தில் விபத்து: ஒருவர் பலி; மற்றொருவர் படுகாயம்!

IMG 9972
IMG 9972

வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்துடன் மோதியதில் அதன் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று பிற்பகல் 3.30 மணியளவில் யாழ்ப்பாணம் – இராசபாதை வீதி, அச்சுவேலியில் இந்த விபத்து இடம்பெற்றது.

இதில், வசாவிளானை சேர்ந்த லக்ஷய தீபன் (வயது 31) என்பவர் உயிரிழந்தார். அவருடன் பயணித்த சதீஷ் (வயது 22) என்பவர் படுகாயமடைந்தார்.

படுகாயமடைந்தவர் அச்சுவேலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அச்சுவேலி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.