நாட்டில் கொரோனா தொற்று காரணமாக 35 ஆவது உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த நபர் 78 வயதான ஒருவர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதயம் சார்ந்த உபாதை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த ஆண் கொரோனா தொற்றால் ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.