நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Reco 2
Reco 2

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில்  மேலும் 378 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சுகாதார அமைச்சு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய,  கொ​ரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 11,031 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 723ஆக காணப்படுகின்றது.

இந்நிலையில், இன்னும் ஐயாயிரத்து 22பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 48பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.