நாட்டின் வட மாகாணத்திலுள்ள முல்லைத்தீவு கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்கள் மற்றும், இந்திய மீனவர்களினால் சட்டவிரோத கடற்தொழில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றனர் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சர் சட்டவிரோத கடற்தொழில் செயற்பாடுளை ஊக்குவிக்கின்றாரா? என்ற கேள்வியும் எழுகின்றது எனவும் ரவிகரன் மேலும் தெரிவித்தார்.
சட்டவிரோத கடற்தொழில் செயற்பாடுகளால் முல்லைத்தீவு மீனவர்கள் எதிர்கொண்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.